பல வண்ண ரயில் பெட்டிகள் தேவை!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு, திருமால்பூர் வரை செல்லும் ரயிலில் சென்னைக்குப் புதிதாக வரும் வெளி மாநிலத்தவர்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயணிக்கின்றனர். 

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு, திருமால்பூர் வரை செல்லும் ரயிலில் சென்னைக்குப் புதிதாக வரும் வெளி மாநிலத்தவர்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயணிக்கின்றனர். 
இந்த ரயில்களில் முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பு / ஆண் / பெண் என வகைப்படுத்தி பெட்டிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அனைத்துப் பெட்டிகளும் பார்ப்பதற்கு ஒரே வகையில் உள்ளதால், ரயில்களில் ஏறும்போது சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் மாற்றி ஏறி அபராதமும் விதிக்கப்படுகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகளுக்கு பல நிறங்களை அடித்து வகைப்படுத்தவும் அதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.எத்திராஜன்,  சைதை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com