மயான பராமரிப்பு தேவை..!

திருநீர்மலை ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் மிகப் பெரிய மயானம் உள்ளது.

திருநீர்மலை ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் மிகப் பெரிய மயானம் உள்ளது. எரிமேடை, கழிப்பறை, குளியலறை, விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முறையாகப் பராமரிக்காததால் இங்கு புதர்மண்டிக் கிடப்பதால் சமாதிகளும் மறைந்து கிடக்கின்றன. கழிப்பறைக் கட்டடத்தின் மேல் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இம்மயான வளாகத்துக்குள் லட்சுமிபுரம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகம் புதர்களை அகற்றி, கழிப்பிடக் கட்டடத்தைப் புதுப்பித்து சீராகப் பராமரிக்க வேண்டும். குப்பைகளை மயானத்தில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com