உணவுத்துறையினர் கவனத்துக்கு...

சென்னை பெருமாநகராட்சி 108-ஆவது வட்டம், செல்வ விநாயகர் கோயில் தெருவில் இயங்கும் பி.சி.ஓ. 032 ரேஷன் கடையில் சோப், டீ தூள், மிளகு போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

சென்னை பெருமாநகராட்சி 108-ஆவது வட்டம், செல்வ விநாயகர் கோயில் தெருவில் இயங்கும் பி.சி.ஓ. 032 ரேஷன் கடையில் சோப், டீ தூள், மிளகு போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வாங்காவிட்டால் எந்தப் பொருளும் இல்லை எனத் தெளிவாகக் கூறுகின்றனர். காலை 8.30 மணி முதல் 12.30 வரை மாலை 3 முதல் 7 மணி வரை ரேஷன் கடை திறந்திருக்கும் என்ற அறிவிப்புப் பலகை மிக தெளிவாக இருந்தாலும் தாமதமாக திறப்பதும் சீக்கிரமாக மூடி விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com