கோடைக் காலம் தனியார் பல் பொருள் அங்காடிகளில் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய பொருள்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். ஒவ்வொரு அங்காடிகளிலும் தீயணைப்பு சாதனங்களை பொருத்த வேண்டும். மின்கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை மணி எழுப்பும் கருவிகளைப் பொருத்தவும் தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.பர்வீன் பாத்திமா, ஈக்காட்டுத்தாங்கல்.