அண்ணனூர் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் நிற்பதற்கு ஏதுவாக நடைமேடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நிழற்குடைகளில் போடப்பட்டுள்ள இருக்கைகளையும் தாண்டி ரயில் 30 மீட்டர் தூரத்தில் நிற்கிறது. பயணிகள் வெயிலில் ஓடி ஏற வேண்டியுள்ளது. நீட்டிக்கப்பட்டுள்ள நடைமேடையில் நிழற்குடைகளுடன் இருக்கைகளும், குடிநீர் வசதியும் செய்து தர தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சுந்தர், அண்ணனூர்.