சென்னை பெருமாநகராட்சி 7-ஆவது மண்டலம், 90-ஆவது வட்டத்தில் அமைந்துள்ள வெல்கம் காலனி முதல் தெருவில் மழைநீர் கால்வாய் பணி தொடரவில்லை. இதுகுறித்த புகாரை பெருமாநகராட்சி புகார் பிரிவு எண்-1913-ல் பதிவு செய்யப்பட்டு குறுந்தகவல் எண் 356பிகே எனது கைபேசியில் வந்துள்ளது.
இதுநாள் வரை மழைநீர் வடிகால் வாரிய பணியை பராமரிக்கும் அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திலா செல்வராஜ், பாடி.