திருவான்மியூர் சிக்னல் அருகே 4 சாலைகள் சந்திப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எல்.பி. சாலையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் சாலையில் இறங்கி நடக்க வேண்டியுள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே நடை பாதையை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் சாலைகளின் குறுக்கை நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
- ஜி.லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்.