வங்கியில் முதியோருக்கு தனி கவுன்ட்டர் தேவை

சென்னை கே.கே.நகர் ராமசாமி சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மாதாந்திர ஓய்வூதியம், வைப்பு நிதிக்கான வட்டியைப் பதிவு செய்வதற்கு வங்கிக்கு சென்றால்

சென்னை கே.கே.நகர் ராமசாமி சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மாதாந்திர ஓய்வூதியம், வைப்பு நிதிக்கான வட்டியைப் பதிவு செய்வதற்கு வங்கிக்கு சென்றால், கவுன்ட்டரில் பதிவு செய்வது இல்லை. வங்கிக்கு வெளியே உள்ள இயந்திரத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால் அந்த இயந்திரம் சரியாக இயங்குவதில்லை. சில நேரங்களில் வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளே மாட்டிக் கொண்டு வெளியில் வருவதில்லை. பதிவும் சரிவர இருப்பதில்லை. இதனால் என்னைப் போன்ற வயது முதிர்ந்தவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பிற வங்கிகளில் உள்ளது போன்று முதியவர்களுக்கு தனி கவுன்ட்டர் அமைத்து வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

 - எம்.முனுசாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com