ஆவடியில் இருந்து நசரத்பேட்டை, இருங்காட்டுக்கோட்டை, சிப்காட், ஸ்ரீபெரும்பூதூர், வல்லக்கோட்டை, ஒரகடம், படப்பை வழியாக கூடுவாஞ்சேரிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ளது. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், சென்னை துறைமுகத்துக்கு விரைவாகச் செல்ல முடியும். மேலும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்பூதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும். எனவே, மேற்கண்ட ரயில் பாதையை அமைக்க ரயில்வே அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.பார்த்தசாரதி, முத்தா புதுப்பேட்டை.