சென்னை பெரம்பூர் நியூ பேரன்ஸ் சாலை தாஷாமக்கான் பகுதியில் கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு உரிய நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. அலுவலகத்தில் நேரில் வருமாறு கூறி மின் கட்டணம் வசூலிக்கிறார்கள். வீடுகளில் உள்ள மின் அட்டையில் மின் கணக்கீட்டை பதிவு செய்யாமல் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள கணினியில் நேரடியாக மின் கட்டணத்தைப் பதிவு செய்யும் நிலை காணப்படுகிறது. இதனால், இப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மின் கணக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்.
தி.கெüஷிகா, பெரம்பூர்.