மடிப்பாக்கம் பிரதான சாலையில் புவனேஸ்வரி குறுக்குத் தெருவிற்கு திரும்பும் முனையில் பயன்பாட்டில் இல்லாத மின் கம்பத்தின் மீது லாரி மோதியதால், மின் கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மின் கம்பிகள் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், மடிப்பாக்கம்.