திருவொற்றியூர் நடபாய் தோட்டம், நெல்லுக்காரன் தெரு, புதுவண்ணாரப்பேட்டை பொன்னுசாமி தெரு ஆகிய இடங்களில் உள்ள தெருக்களின் பெயர்ப் பலகைகளை பல மாதங்களாகக் காணவில்லை. அவற்றை தாங்கி நிற்கும் தூண்கள் மட்டுமே உள்ளன. இதனால் முகவரி தேடி வரும் நபர்கள், தபால்காரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பழைய முறைப்படி தெருக்களில் மஞ்சள் நிறம் அடித்து கருப்பு வண்ணத்தில் பெயரிடுவதே சாலச் சிறந்தது.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.