சென்னையில் காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் என பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் உள்பட பலர் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மந்தவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் பேருந்திலிருந்து ஒரு பள்ளி மாணவன் தவறி விழுந்த நிகழ்வும் நடந்தேறியது. ஆகவே, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களுக்கென்று தனிப் பேருந்துகளை விட மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.நவநீதக்கண்ணன், ஆர்.ஏ.புரம்.