தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெரு கிளை நூலக நுழைவு வாயில் மேல்புறத்தில் தனியார் இசைக்குழுவின் விளம்பரம் புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நூலக அதிகாரிகள் நீக்கி நூலகத்துறை மற்றும் புத்தகங்கள் சார்ந்த கருத்துகளைப் பொறிக்க வேண்டும். அரசு நூலக சுவரில் தனியார் விளம்பரம் இருப்பது எந்த வகையில் நியாயம்? இதுகுறித்து நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.உதயகுமார், தண்டையார்பேட்டை.