ஸ்டான்லி மருத்துவமனையை ஒட்டியுள்ள ஏழு கிணறு அருகே நீண்ட காலமாக இருந்த பேருந்து நிறுத்தம் பாலம் பழுது பார்ப்புக் காரணமாக சிறிது தொலைவுக்கு மாற்றப்பட்டது. பாலம் பணி முடிந்து பல மாதங்கள் கடந்தும் பேருந்து நிறுத்தம் முந்தைய இடத்துக்கு மாற்றப்படாததால் முதியவர்கள், நோயாளிகள் கர்ப்பிணிகள், பள்ளி செல்வோர் அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மீண்டும் முந்தைய இடத்துக்கே பேருந்து நிறுத்தத்தை உடனடியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.டி.ராமகிருஷ்ணன், ஏழுகிணறு.