மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஆணையின் பேரில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வந்தது. இதன்படி மூத்த குடிமக்கள் மாதத்துக்கு 10 டோக்கன்கள் பெற்று பயன் அடைந்து வந்தனர். ஆனால் இந்த சலுகை தற்போது சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதை மீண்டும் வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கோபாலன், மறைமலைநகர்.