ஏழு கிணறு பூங்கா அருகே மங்கம்மாள் தெருவின் திருப்பத்தில் வாகனம் பழுது பார்க்கும் கடையும், வெல்டிங் கடையும் இயங்கி வருகின்றன. அங்கு நிறைய இருசக்கர வாகனங்கள் தெருவை அடைத்துக்கொண்டு அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் தொல்லையாக உள்ளதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.ரவீந்திரன், ஏழுகிணறு.