ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியில் மாநகர பேருந்து பஸ் நிலையம் குண்டும், குழியுமாக உள்ளது. பேருந்துகள் உள்ளே வந்து செல்லும் போது ஏற்படும் புழுதியால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே பஸ் நிலையத்தை செப்பனிட்டுத் தர வேண்டும். இரவு நேரங்களில் விளக்கு இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பஸ் நிலையம் விளங்குகிறது. ஆகவே பஸ் நிலையத்தைத் தரம் உயர்த்த போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கண்ணன், ஆதம்பாக்கம்.