சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை என்.எஸ்.கே.நகரில் விடியற்காலை 4.30 மணிக்கே தேசிய நெடுஞ்சாலை விளக்குகளை அனைத்து விடுகிறார்கள். இதனால் கோயம்பேடு சென்று காய்கறி, பூ, பழம் வாங்கி வர பேருந்து பிடித்துச் செல்லும் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ஆகவே மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கூடுதல் நேரம் விளக்குகளை எரியவிட்டு பொதுமக்கள் பயமின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோதை.ஜெயராமன், மீஞ்சூர்.