சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் - எழும்பூர் ரயில் நிலைய சந்திப்பு சிக்னலில் பாதையைக் கடந்து செல்வது அபாயகரமாக உள்ளது.சிக்னலில் வாகனங்கள் நிறுத்தக் கோட்டை தாண்டி பாதசாரிகள் நடந்து செல்லக் கூடிய இடத்தை மறித்து முந்தி நிற்கின்றனர். ஒரு நிமிடம் மட்டுமே நடப்பதற்கு சிக்னல் போட்டால் பாதசாரிகள் கடப்பது அபாயகரமாக உள்ளது. ஆகவே அச்சந்திப்பில் போக்குவரத்து போலீஸார் கூடுதலாக நிறுத்தி நிறுத்தக் கோட்டை தாண்டுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, சூளை.