சென்னையில் பல இடங்களில் நடைபாதை நடப்பதற்கே என தெரிந்தே பலர் நடைபாதையில் வாகனங்களைச் செலுத்துவதும், நிறுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.இதனால் நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் உத்தமர்காந்தி சாலைகளில் இது வாடிக்கையாகி வருகிறது. இதை பார்க்கும் போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
தி.நவநீதக்கண்ணன், ஆர்யபுரம்.