சென்னை அடையாறு பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அதனால் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நிற்பதில்லை. இதனால் மாணவிகள் வெகு தொலைவிற்கு வந்து பேருந்து ஏற வேண்டியுள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.