சென்னை ஒட்டேரி பகுதியில் பிரிக்ளின் சாலையில் உள்ளது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்த கல்லறை தோட்டம். இதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகின்றன. காரணம் முறையாக குப்பை அகற்றும் பணி அந்தப் பகுதியில் நடைபெறுவதில்லை.
குப்பைகளால் நிறைந்த கல்லறைப் பகுதி முழுக்க குப்பைக் கிடங்காக காட்சியளிக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதிலா உயரதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஜீவா, ஓட்டேரி.