சென்னை 137-ஆவது வார்டு, 61-ஆவது தெரு, 10-ஆவது செக்டர், கே.கே.நகர் மேற்கு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய விளையாட்டு மைதானமும், அதைச்சுற்றி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இங்கு விளையாடும் போது பந்துகள் குடியிருப்புகளுக்குள் விழுவதால் கதவை தட்டி தொந்தரவு செய்கிறார்கள். இரவில் சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது. மாநகராட்சி பூங்காக்களை பூட்டி பராமரிப்பது போன்று, இந்த மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.முனுசாமி, கே.கே.நகர்.