பாடியில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் பட்டாபிராம் சோழன் நகர் பாண்டியன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படாததால், தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர். இதனால் இப்பகுதி சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது.