மடிப்பாக்கத்தில் பல இடங்களில் பிரதான சாலைகள், குறுக்குச் சாலைகளில் மின்துறையினர், தகவல் தொடர்புத் துறையினர் மற்றும் பிற துறையினரால் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடி செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன் சாலைகளைச் சீர் செய்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
-எம்.எஸ். இப்ராஹிம், சென்னை.