நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருவொற்றியூர் மேற்கு குளக்கரை சாலை மேடு பள்ளங்கள், சிறுகற்கள் நிறைந்த சாலையாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

திருவொற்றியூர் மேற்கு குளக்கரை சாலை மேடு பள்ளங்கள், சிறுகற்கள் நிறைந்த சாலையாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும். கோயிலைச் சுற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவ்வழியாக வந்து செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சாலையில் சிறுநீர் கழிப்பதால் இங்கு சிறுநீர் கழிப்பிடமும் அமைக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் தடுப்பு போடப்பட்டுள்ள குறுகலான இடங்களில் விபத்து நேரிடுகிறது. பல இடங்களில் பெயர்ப்பலகை இல்லை. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com