போக்குவரத்து காவல் துறை  கவனத்துக்கு...!

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சைகை (சிக்னல்) விளக்கு பல நாள்களாக மஞ்சள்விளக்கு மட்டுமே எரிகிறது.

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சைகை (சிக்னல்) விளக்கு பல நாள்களாக மஞ்சள்விளக்கு மட்டுமே எரிகிறது. போக்குவரத்துக் காவலரும் பல நேரங்களில் இங்குப் பணியில் இருப்பதில்லை. இந்த நான்குமுனை சந்திப்பில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எனவே போக்குவரத்துக் காவல் துறையினர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று சென்னை மணப்பாக்கம், ராமாபுரம் மியாட் மருத்துவமனை பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் காவலரை நியமிப்பதுடன், சிக்னல் அமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். 

-மு. அருணாச்சலம், நீதிபதிகள் குடியிருப்பு, சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com