மாங்காடு கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைக்காலத்தில் தூர்வாறிய குப்பைகளும் கான்கிரீட் கற்களும் இரு புறமும் சாலையில் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்கவும் முடியவில்லை. முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் இணைந்து இருபுறமும் கொட்டப்பட்ட குப்பைகள், கான்கிரீட் கற்களை அப்புறப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
ஈ.எஸ்.பெருமாள், மாங்காடு.