சென்னை மாநகராட்சி மண்டலம் 4 வட்டம் 46-க்கு உட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி பிரதான சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய் முழுவதும் குப்பை கூளங்கள், மண்ணால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதைச் சரிசெய்து தருமாறு மாநகராட்சிக்குப் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆகவே தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பி.இடும்பன், வியாசர்பாடி.