பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 3, வட்டம் 29-ல் அடங்கிய சின்ன சேக்காடு, பல்ஜி பாளையம், கக்கன் புரம், சவுரி கொல்லை மேடு பகுதிகள் கடந்த 2011 -ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை. தெருவெங்கும் வெறி நாய்கள், மாடுகளும் சுற்றித் திரிகின்றன. இப்பிரச்னைகள் சம்பந்தமாக நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சி.இளஞ்செழியன், சின்னசேக்காடு.