பாரிமுனையிலிருந்து திரு.வி.க. நகர் செல்லும் 8 பி பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. முதியவர்கள் மற்றும் நோயாளிகள், பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.ரவீந்திரன், பாரிமுனை.