சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதி வளைவிற்கு அருகில் , அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சேவைக்காக மூடப்பட்ட பாதசாரிகளின் சுரங்கப்பாதையும் வளைவிற்கு எதிரில் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்லும் பேருந்து நிறுத்தத்தையும் பயணிகளின் நலன் கருதி மீண்டும் கொண்டு வரவேண்டும். மெட்ரோ ரயில் பணிகளுக்காக பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்துள்ளதால் பேருந்து நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
டி.எஸ்.ராஜூ, சைதாப்பேட்டை.