சென்னை திருமங்கலம் பள்ளி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரங்கள் ஒரே அறையில் உள்ளன. எப்போது சென்றாலும் இவை இயங்குவதில்லை. வங்கி மேலாளரிடம் கேட்டால், வங்கி நிர்வாகம் வேறு, ஏடிஎம்களைப் பராமரிக்கும் துறையோ வேறு என்கிறார். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கும் வங்கி நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களின் சேவையில் சிறிதாவது கவனம் செலுத்த வேண்டும்.
ரேவதி வெங்கடேசன், மயிலாப்பூர்.