சென்னை கொரட்டூர் வெற்றி நகர் தெருக்களில் மின்கம்பங்கள் உள்ளன. பல மாதங்களாக இவற்றில் வயர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் அடிக்கடி நகை பறிப்புகளும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுவதும் தொடர்கதையாகி வருகின்றது. காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் பதிவு செய்யப்படுவதில்லை. சென்னை பெரு மாநகராட்சி புகார் பிரிவில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக பதில் வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.