சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் உள்ளதால், தாம்பரத்தில் இருந்து காலை, இரவு நேரங்களில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பிற ரயில்கள் செங்கல்பட்டுக்கும், திருநெல்வேலிக்கும் இயக்கப்படுகின்றன. சென்னை பீச், கோட்டை, பார்க், எழும்பூர் ஆகிய இடங்களிலிருந்து இணைப்பு ரயில்களை இயக்கி தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் பிளாட்பாரம் எதிரே நிறுத்துவதன் மூலம் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய முடியும். ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.
-ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.