மடிப்பாக்கம் - மேடவாக்கம் சீரமைப்புப் பணிக்காக ஆங்காங்கே பொதுப்பணித் துறை சார்பில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. எடுத்த வேலையை முடிப்பதற்கு நீண்ட நாள் ஆவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இப்பிரச்னையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
- எம்.எஸ்.இப்ராஹிம், மேடவாக்கம்.