புறநகர் மின்சார ரயில்களில், வண்டி சேருமிடம் மற்றும் அடுத்த ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பு மின்னணு பலகைகள் மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. தற்பொழுது நிறுத்தப்பட்டு இனிய பயணத்துக்கு வாழ்த்துகள் என்று மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. பயணிகள் நலன் கருதி மீண்டும் அடுத்த ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பை ஒலிபரப்ப ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கனகவேல், ஆவடி.