சென்னை பெருமாநகராட்சி 108-ஆவது வட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், சிராஜ், செல்வ விநாயகர், ஆனந்தவள்ளி, ரங்கநாயகி, லட்சுமி அம்மாள் உள்ளிட்ட தெருக்கள், 105-ஆவது வட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு தெருக்களில் தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன.
தெரு விளக்குகள் எரியாததால் இரவில் சைக்கிள், இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் மேடு, பள்ளம் தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். பெண்களை கேலி, கிண்டல் செய்து நகைகளைப் பறிப்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை.