பெருங்களத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 12-ஆவது வார்டு சமத்துவபுரம் சாலையிலுள்ள மழைநீர் குட்டையானது நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. வீடுகளிலிருந்து வரும் சாக்கடை நீர் இதில் கலப்பதால் தான் இந்த விபரீதம். அதிலும் மழைக்காலங்களில் சாக்கடை நீர் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுக் கிருமிகள் அதில் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி குட்டையை மூடிவிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா அமைத்து தர வேண்டும்.
பி.புதசாமி, பெருங்களத்தூர்.