வடபழனி துரைசாமி சாலை-ஆற்காடு சாலை சந்திப்பில் (அஞ்சல் நிலையம் அருகே) அண்ணா நூலகம் உள்ளது. அதன் அருகில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் சாலையை ஆக்கிரமித்து கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கழிவறையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
- பாபு ரவி, கோடம்பாக்கம்.