மடிப்பாக்கம் ஏரிக்கரையில் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் வேலி போடப்பட்டு, புது பொலிவுடன் உள்ளது. காலை நேரங்களில் மக்களின் நடைப்பயிற்சிக்கும், மாலை நேரங்களில் முதியோர் அமர்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்திலும் மெரீனாவைப் போன்று, மாலை நேரங்களில் ஏராளமான சாலையோரக் கடைகள் பெருகி வருகின்றன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- எம்.எஸ்.இப்ராஹிம், சென்னை-91.