சென்னை திரு.வி.க. நகர் கிருஷ்ணாநகர் பிரதான சாலையில் மெட்ரோ குடிநீர் பழைய குழாய்களை மாற்றி புதிய பைப்புகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்காக, கிருஷ்ணா நகர் 2ஆவது தெருவில் 40 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இங்கு பணிகள் இன்னும் நிறைவடையாததால் பள்ளம் இன்னும் மூடப்படாமல் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடித்து புதிய குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யவும், பள்ளத்தை மூடி பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும்.
- வி.ஜெயகோபால், பெரவள்ளூர்.