சென்னை தாம்பரம் அருகில் உள்ள பெருங்களத்தூர், அண்மைக் காலமாக மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகும். சென்னை நோக்கி வரும் வெளியூர் பேருந்துகள் பெருங்களத்தூரைக் கடந்துச் செல்வதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு குடியேறிய வண்ணம் உள்ளனர். ஆனால், இங்கு இதுவரை அரசு நூலகம் அமைக்கப்படாதது குறை. எனவே பாரதி அவென்யூ பிரதான சாலையில் ஒரு நூலகம் திறக்கப்பட்டால் மாணவர்களும், பொதுமக்களும் பயனடையவர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கே.எஸ். வெங்கடேசன்,
புதுபெருங்களத்தூர்.