சென்னை மாநகராட்சி மண்டலம் 5 வட்டம் 50-க்கு உள்பட்ட ராயபுரம், கிழக்கு, மேற்கு மாதா கோயில் தெரு, சென்னைத்துறைமுக 3-ஆவது எண் நுழைவு வாயில் சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் 4 முனைகளில் வேகத்தடை அமைத்து விபத்துகள் ஏற்படுவதைத் தடுத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உதவ வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.