பகுதி - 384

பழனித் திருப்புகழான இன்றைய பாடல்

பழனித் திருப்புகழான இன்றைய பாடல் உபதேசித்து அருளவேண்டும் என்று இறைவனைக் கோருகிறது.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 22 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற அனைத்து சீர்களிலும் குறில் பயில்கிறது; ஒற்று சேர்த்தால் ஒவ்வொரு சீரிலும் நான்காவது எழுத்து வல்லின மெய்.  பாடலைப் பார்ப்போம்.

தனனத் தனனத் தனனத் தனனத்
      தனனத் தனனத்  - தனதான

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
         பொருமிக் கலசத் - திணையாய
      புளகக் களபக் கெருவத தனமெய்ப்
         புணரத் தலையிட் - டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
         கறிவி பதடிக் -  கவமான
      அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
         றடிமைக் கொருசொற் - புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
         குணமெய்க் களிறுக் - கிளையோனே
      குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
         குறுகித் தகரப் - பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
         பழமுற் றொழுகப் - புனல்சேர்நீள்
      பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
         பழநிக் குமரப்                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com