சிதம்பரத்துக்கு அருகிலுள்ள திருவேட்களம் என்னும் தலத்துக்கான இப்பாடல் ஆசைகள் அற்றுப் போகும்படி வேண்டுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகளே பயின்றாலும் இவற்றில் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிகின்றது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில்களுமாக அமைந்திருக்கின்றன.
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன தனதான
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய பெருமாளே.