பகுதி - 716

உனது திருவடியைத் தந்தருளவேண்டும்
பகுதி - 716

‘உனது திருவடியைத் தந்தருளவேண்டும்’ என்று கோருகிற இப் பாடல் திருச்சிராப்பள்ளிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  பெரிதும் வல்லொற்றுகளால் அமைந்திருப்பது. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு குறிலையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் இரண்டு நெடில் எழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குறில், ஒரு நெடில் என நான்கு எழுத்துகளையும் கொண்டு அமைந்துள்ளன.


தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
      தத்த தானா தனாதன               தந்ததான

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
         தத்வ வாதீ நமோநம             விந்துநாத

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
         தற்ப்ர தாபா நமோநம            என்றுபாடும்

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
         பச்சை பாடீ ரபூஷித              கொங்கைமேல்வீழ்

பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
         பத்ம சீர்பா தநீயினி              வந்துதாராய்

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
         யர்க்ய சோமா சியாகுரு          சம்ப்ரதாயா

அர்ச்ச னாவா கனாவய லிக்குள் வாழ்நா யகாபுய
         அக்ஷ மாலா தராகுற             மங்கைகோவே

சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
         திக்கு பாலா சிவாகம             தந்த்ரபோதா

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
         தெர்ப்பை யாசா ரவேதியர்        தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com