‘ஞானமாகிய உபதேசத்தை அடையுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டுகிற இந்தத் திருப்புகழ் காசித் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்று நீக்கி 34 எழுத்துகளை உடைய பாடல்; ஒவ்வொரு முதல், மூன்றாம், நான்காம் சீரும் நெடிலெழுத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு இரண்டாம் சீரின் இரண்டாம் எழுத்தும் வல்லொற்றாகப் பயில்கிறது.
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன - தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயிறு - மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய - நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு - வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் - புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய
மாய வற்கித மாக வீறிய - மருகோனே
வாழு முப்புற வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் - புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய - கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை - பெருமாளே.