‘முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே’ என்ற ஈற்றடியோடு முடியும் பத்து அல்லது பதினோரு பாடல்களில் இதுவும் ஒன்று. பொருளின் மீது வைத்திருக்கும் பற்றை அறுக்கக் கோரும் இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அமைப்பு முறையில் இதுவும் அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்டது; ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்து வல்லொற்று; மூன்றாமெழுத்து நெடில். ஒவ்வொரு ஆறாம் சீரிலும் இரண்டு, நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் வல்லொற்று.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
பொய்ப்போ கத்தைப் பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
கித்தே கைக்குப் பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
திக்கோ டிப்பச் சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
விக்கோ டிக்கெட் டிடலமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
ரைச்சா ரத்தற் பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தே
சத்தோர் நிற்கத் தகையோடே
முற்கா னப்போ தைக்கா கப்போய்
முற்பால் வெற்பிற் கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.